சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக பயிற்சி புத்தகங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் எட்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட 2018 ஆம் ஆண்டிற்கான பயிற்சி புத்தகங்கள் நன்கொடை வழங்கள் கௌரவ பாதுகாப்பு செயலாளர், ஜனாதிபதி ஆலோசகர் கபிலா வைத்யரத்ன அவர்கள் மற்றும் திருமதி ஷலனி வைத்யரத்ன அவர்களின் ஆதரவின் கீழ் 2017 டிசம்பர் 22 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்றது.
பாதுகாப்பு அமைச்சின் உப செயலாளர், கலாநிதி என்ஜீ பண்டிதரத்ன (சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி) விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி, பாதுகாப்பு உப தலைமை அதிகாரி சேவா வனிதா பிரிவின் கௌரவ தலைவி யமுனா விஜேகுணவர்தன, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி லட்சுமி பல்லேகம அவர்கள், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம அவர்கள், துணை பணிப்பாளர் நாயகம் ரியர் அத்மிரால் ஷேமால் பிரனாந்து அவர்கள், அனைத்து இயக்குனர் சபையினர், அனைத்து படை / உப படை / பயிற்சி பாடசாலை கட்டளை அதிகாரிகள் மற்றும் சேவா வனிதா பிரிவின் அங்கத்தவர்கள் உட்பட திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் மற்றும் சிற்பாயிகள் கலந்துகொண்டனர்.