2006 செப்டம்பர் 13ஆம் திகதியிட்ட 1462/ 20ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக ஸ்தாபிக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் செயற்பாடுகள் பின்வருமாறு அமைகிறது.
- நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமைகளின் காரணமாக ஆயுதப் படைக்கும் பொலிஸ் சேவைக்கும் உதவுவதற்காக துணைப் படையாக செயலாற்றுதல்..
- பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கின்ற இடங்களில் கிராமங்கள், சொத்துக்கள், நகரங்கள் என்பவற்றைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
- நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்கு ஆயுதப் படைக்கும் பொலிசுக்கும் உதவுதல்.
- தேசிய நிகழ்வுகளின்போதும் ஏனைய முக்கியமான நிகழ்வுகளின்போதும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடல்.
- நாட்டில் ஏற்படும் பல்வேறு அனர்த்தங்களின்போது (வெள்ளம், மணிசரிவு, சுனாமி போன்றவை) நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடல்.
- சமூக நலனோம்பல் நடவடிக்கைகளில் உதவுதல்.
- சனாதிபதி அவர்கள், அமைச்சர் (விடயத்துக்குப் பொறுப்பானவர்) அல்லது அரசாங்கத்தால் பணிக்கப்படுகின்ற விசேட நிகழ்வுகளில் ஈடுபடல்.
- சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமை நிலையத்தை அமைத்தல்.